சங்க காலம், தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் ஆகும். மதுரை தமிழ் சங்கங்களின் இருப்பிடம் ஆகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் கிரேக்க அறிஞர் மெகஸ்தனிஸ் மதுரை வந்ததாக வரலாறு உள்ளது. மேலும் ரோமானியர், கிரேக்கர்கள் பாண்டிய மன்னர்களுடன் வர்த்தகம் செய்துள்ளனர்.
கி.பி. 920ம் ஆண்டு முதல் 13ம் நூற்றாண்டின் துவக்கம் வரை பாண்டிய நாடு சோழர்கள் வசம் இருந்தது. கி.பி.1223ம் ஆண்டு பாண்டியர்கள் மீண்டும் தங்கள் நாட்டை பெற்றனர். பாண்டியர்கள் காலத்தில் தமிழ் மொழி தழைத்தோங்கியது. அவர்கள் காலத்தில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது.
1311ம் ஆண்டில் அலாவுதீன் கில்ஜியின் தளபதி, நகைகள் மற்றும் அரிய பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மதுரைக்கு படை திரட்டி வந்தார். இந்த சம்பவம் தொடர்ந்து முஸ்லிம் மன்னர்கள் மதுரையில் கொள்ளை அடிப்பதற்கு வழியாக அமைந்தது. 1323ம் ஆண்டில் மதுரை டில்லியை ஆண்ட துக்ளக் மன்னர்களின் ஒரு மாகாணமாக மாறியது. பின்னர் 1371ம் ஆண்டில் மதுரை விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. விஜய நகர பேரரசர் கிருஷ்ணதேவ ராயரின் மறைவிற்கு பின் நாயக்கர்கள் மதுரையை ஆண்டனர். நாயக்கர்களின் ஆட்சியில் திருமலை நாயக்கர் மன்னர் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் மதுரையின் கட்டமைப்பை மேம்படுத்தினார். மீனாட்சி அம்மன் கோயிலின் ராஜகோபுரம், புதுமண்டபம் மற்றும் திருமலை நாயக்கர் மகால் ஆகியவை அவரது புகழை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
ConversionConversion EmoticonEmoticon